Posted on Sep 29 , 2010 in மரண அறிவித்தல்

சூசைப்பிள்ளை லோறன்சியா

0 Comments
சூசைப்பிள்ளை லோறன்சியா

பெயர்: திருமதி சூசைப்பிள்ளை லோறன்சியா
இடம்: பண்டத்தரிப்பு

திருமதி சூசைப்பிள்ளை லோறன்சியா (தங்கம்)
சில்லாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சூசைப்பிள்ளை லோறன்சியா (தங்கம்) நேற்று முன்தினம் (27.09.2010) திங்கட் கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ்திரேசம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், சூசைப்பிள்ளை (பொன்ராசா) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர் களான ஞானப்பிரகாசம்எலிசபேத் தம்பதியரின் அன்பு மருமக ளும் காலஞ்சென்ற நீக்கிலாப்பிள்ளை, மேரி இமெல்டா (ராணி), கெலன் (ராசம்மா), பிறக்சீடா (லில்லி) ஆகியோரின் அருமைச் சகோதரியும் டேவிற் அன்ரன் தவறாஜா (பாபுசுவிஸ்), அன்ரனிற்ரா ஜெயந்தினி (கொழும்பு), விமலா றாஜேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும் விக்ரோறியா, டிமானி (சுவிஸ்), பிரான்சிஸ் பிறமியல் பிறகேஸ்வரன் (லைவ் ஸ்ருடியோ கொழும்பு), யஸ்ரின் (இ.கூ.ஆ)ஆகியோரின் அருமை மாமியும் யோசவ் திலிபன், ஜேக்கப் ராம்குமார், மைக்கல் றாஜா, ஜெனிவர் திரேஸ் லின்சி, அன்ரோ லைவ்ரன், ஜெல்றி, கறோலின் யஸ்மி, தஸ்நேஸ் நிஸ்மி ஆகியோரின் அருமைப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இறுதி நிகழ்வுகளுக்காக சில்லா லையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து இன்று (29.09.2010) புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் எடுத்துச் செல்லப் பட்டு சில்லாலை கதிரைமாதா ஆலயத்தில் இரங்கற் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கதிரை மாதா ஆலய சேமக்கா லையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: விமலா (மகள்).
சில்லாலை,பண்டத்தரிப்பு

ஆறுதல் தெரிவிக்க...