Posted on Aug 16 , 2010 in நினைவஞ்சலி

சிந்துஜா வில்வரத்தினம்

0 Comments
சிந்துஜா வில்வரத்தினம்

மலர்வு : 17 ஓகஸ்ட் 1982 — உதிர்வு : 17 ஓகஸ்ட் 2007

சுவிஸைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிந்துஜா வில்வரத்தினம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு மூன்று ஆனதம்மா!

துள்ளி விளையாடி பிள்ளை மொழிபேசி
வெள்ளிச் சிரிப்பால் எம் மனதைக்
கொள்ளையடித்த கள்ளி, நீ ஓடி ஒளித்து
இன்று ஆண்டு மூன்று ஆனதம்மா!

அழகுநிலா ஒன்று உருவிழந்து, கழையிழந்து
மீண்டும் வளர மறந்து தினமும்
தேய்பிறையாய் கரைந்து, கடல் சேர்ந்து
இன்று ஆண்டு மூன்று ஆனதம்மா!

பனித்த இதழ் பரப்பி பரிமளித்த மலரொன்று
காணும் என்று எண்ணி காம்பில் இருந்து
கழன்று விழுந்து இன்று ஆண்டு மூன்று ஆனதம்மா!

தென்றல் வரும் தெருவில் சித்திரமாய்
சுழன்றுவந்த சிங்காரத் தேரொன்று
பாதைமாறிச்சென்று எம்மைப் பரிதவிக்க
வைத்த இன்று ஆண்டு மூன்று ஆனதம்மா!

சபையேற நினைத்த சட்ட நூலொன்றை
விலையேதும் தெரியாத வியாபாரி போல
படியேதும் போடாமல் பாதி மதித்து
இறைவனடி தேடிச் சென்று
ஆண்டு மூன்று ஆனதம்மா!

ஆண்டு மூன்றோ அகவை முன்றோ
மூபத்து, முன்னூறு வருஷங்களோ
எமது ஆயுள் உள்ள வரைக்கும்
எம்முள்ளே உன்னினைவு உலவுமடி
உன்னினைவு எம்முள்ளே இல்லையென்று போனால் – அன்று
நாமும் இல்லை இவ்வுலகில்
நம்புவாயா மகளே!

உமது பிரிவால் துயருறும் அப்பா, அம்மா, குடும்பத்தினர்

ஆறுதல் தெரிவிக்க...