Posted on Aug 13 , 2010 in நினைவஞ்சலி

சின்னம்மா இராதாகிருஷ்ணன்

0 Comments
சின்னம்மா இராதாகிருஷ்ணன்

அன்னை மடியில் : 11 ஏப்ரல் 1944 — ஆண்டவன் அடியில் : 2 ஓகஸ்ட் 2009

கைதடியைப் பிறப்பிடமாகவும் நுவரெலியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னம்மா இராதாகிருஷ்ணன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்னார், இராதாகிருஷ்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,

மனோரஞ்சனி, மாலாஜெயந்தினி, நளாயினி(அவுஸ்திரேலியா), பிரபாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு தாயாரும்,

காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன்(இலண்டன்), ராஜன்(பிரான்ஸ்) ஆகியோரின் மாமியாரும்,

சுப்பிரமணியம்(இலங்கை) அவர்களின் அன்பு சகோதரியும்,

ஸ்டீபனி, கெவின், சிந்தியா, துளசியா, அகல்யா ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.

அன்பின் இலக்கணமே
எம் இதய தெய்வமே
பண்பின் சிகரமே
எம் பாசத்தின் ஒளிவிளக்கே

இனியசொல் பேசி
எமை வளர்த்த
ஈடில்லா அன்னையே
கண்ணைப் போல்
எமைக் காத்த
கருணையின் திருவுருவே

கலையான உங்கள் முகமும்
கள்ளமில்லா புன்னகையும்
கனிவான உங்கள் பேச்சும்
காண்பதெப்போ அம்மா…!!

உங்கள் உருவத்தை
நாம் இழந்தோமன்றி
நின் உயிர் எம்மோடுதான்
இருக்குதம்மா..!

ஆண்டொன்று சென்றதம்மா
நின் மறைவு நேற்று போல் உள்ளதம்மா
ஓராண்டு என்ன
ஓராயிரம் ஆண்டுகள் சென்றாலும்
நித்தம் உங்கள் நினைவுகளோடு
நின் பாதமலர் பணிகின்றோம் நேசத்துடன்.

வானுறையும் தெய்வமாகிவிட்ட எம் அன்புத்தாயின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி.!

தகவல்
இராதாகிருஷ்ணன்(கணவர்), பிரபாகரன்(மகன்), மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சுப்பிரமணியம்(சகோதரன்)

இராதாகிருஷ்ணன்(கணவன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33669408014
செல்லிடப்பேசி: +33616699838

ஆறுதல் தெரிவிக்க...