Posted on Oct 26 , 2010 in மரண அறிவித்தல்

இராஜேஸ்வரி தியாகராஜா

3 Comments
இராஜேஸ்வரி தியாகராஜா

பெயர்: திருமதி இராஜேஸ்வரி தியாகராஜா (லோசினி அக்கா)
இடம்: கோப்பாய் வடக்கு

மலேசியாவைப் பிறப்பிடமாகவும் வடகோப்பாய் பிராம் பற்றையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இரா ஜேஸ்வரி தியாகராஜா 25.10.2010 திங்கட்கிழமை கால மானார்.
அன்னார் காலஞ்சென்ற திரு.ஈ.எஸ்.தியாகராஜா (ஓய்வுபெற்ற பிர தம தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர் களான திரு.திருமதி பொன்னுச்சாமி தம்பதிகளின் அருமை மகளும் காலஞ்சென்ற திரு.எம்.பி.கணேசன் (லண்டன்) அவர்களின் அருமைச் சகோதரியும் நெட்டிலிப்பாய், கோண்டாவிலைச் சேர்ந்த செல்லப்பா கனகம்மா தம்பதியரின் அருமை மருமகளும், வாசுகி , வரதராஜன் (கிராம சேவகர், ஊரெழு), யோகராஜன் (கனடா), செம்மனச்செல்வி (ஆசிரியை, வ/இறம்பைக்குளம் ம.ம.வித்தியாலயம்), இராஜராஜன் (பிரான்ஸ்), சிவசக்தி (ஆசிரியை, நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்புத் தாயாரும் திரு.எஸ்.நவரட்ணம் (வருகை விரிவுரையாளர்,       வ/தொழில்நுட்பக் கல்லூரி, வவுனியா  வளாகம்), திருமதி இராஜாம் பிகை வரதராஜன், திருமதி மாலதி யோகராஜன் (கனடா), திரு.இ.தேசி கன் (வவுனியா), திருமதி சுசீலா இராஜராஜன் (பிரான்ஸ்), திரு.ஜெய ராஜா (யாழ். தினக்குரல்) ஆகியோரின் அன்பு மாமியாரும் இராஜகீர்த்தி கன் (சென்.ஜோன்ஸ் கல்லூரி), இராஜமித்திரன் (யாழ்.இந்துக்கல்லூரி), சித்திராங்கி (வேம்படி மகளிர் கல்லூரி), சாயிமீரா (கனடா), கேசவன் (வ/இறம்பைக் குளம் ம.ம.வித்தியாலயம்), சாருகேசி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (26.10.2010) செவ்வாய்க் கிழமை பிற்பகல் 2 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக வடகோவை கந்தன்காடு இந்து மயா னத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.  இந்த அறிவித்தலை உற்றார், உறவி னர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்
எஸ்.ரி.வரதராஜன்
(கிராம அலுவலர், கோப்பாய்)
இலுப்பையடிப் பிள்ளையார் கோயில் வீதி,
பிராம்பற்றை, கோப்பாய் வடக்கு.


3 அனுதாபச் செய்தி → “ இராஜேஸ்வரி தியாகராஜா ”


  1. pathmasini jeganathan

    13

    WE LOST OUR LOSINIACCA.

    Reply

  2. vani

    13

    அம்மா இறந்தசெய்தி கேட்டு மிகவும் வேதனையடைந்தோம், உங்கள் துயரில் நாமும் பங்குகொள்வதோடு; அம்மாவின் ஆத்மசாந்திக்காக அனைவரும் ஒன்றுசேர்ந்து இறைவனை பிரார்த்திப்போம் .அம்மா எம்மிடம் திரும்பவருவார் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம் .

    Reply

  3. pathma vinayagamoorthy

    13

    Varathananna, My deepest sympathy to you & your family.May her soul rest in peace…….

    Reply

ஆறுதல் தெரிவிக்க... → pathmasini jeganathan